தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ரெளடி கொலை: 20 பேரிடம் விசாரணை

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரெüடி வெங்கடேசன் கொல்லப்பட்டது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 3:02 am IST

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரெüடி வெங்கடேசன் கொல்லப்பட்டது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வண்ணாரப்பேட்டை, வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். வெங்கடேசன் மீது கொலை வழக்குகளும், அடிதடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை தனது மகன் மற்றும் மகளை டியூசன் சென்டரில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்களால் வெங்கடேசனை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்துக்குரிய 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.