சென்னையில் கண்தானத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே தொடங்கிய பேரணியை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து "தானத்தில் சிறந்தது கண்தானம்',"விழிகளைக்கொடுத்து விடியலைத் தருவோம்'உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர்.
பேரணியின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் கண்தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன்ராஜன், திரைப்பட நடிகர்கள் எஸ்.வி.சேகர், சிவா ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் ஏ.பி.கன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜன் கண் வங்கி மற்றும் தி.நகர் ரோட்டரி சங்கம் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் சோதனை

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

