சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கந்து வட்டி பிரச்னையில் தொழில் அதிபர் அடித்துக் கொலை

கடனை திருப்பிச் செலுத்தாததால், மாதவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சனிக்கிழமை கந்து வட்டி கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Updated On :1 செப்டம்பர் 2013, 9:57 pm

கடனை திருப்பிச் செலுத்தாததால், மாதவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சனிக்கிழமை கந்து வட்டி கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

மாதவரம், அகலி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் (48). எலெக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான வீரப்பனுக்கு மனைவி உமாசெல்வி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர்.

சைதாப்பேட்டை, குமரன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சண்முகம் ஆகியோரிடம் ரூ.5 லட்சம் கந்து வட்டிக்கு வீரப்பன் வாங்கியுள்ளார். கடனாக பெற்ற தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வட்டி மட்டுமே கட்டியுள்ளார். ஆனால் அசல் தொகையை முழுதாகத் திருப்பித் தரவில்லை என்று மாரிமுத்து, சண்முகம் ஆகியோர் வீரப்பனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவரது குடும்பத்தாரைக் கொன்று விடுவதாகக் கூறி மிரட்டினார்களாம். இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வீரப்பன் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை (ஆக.31) இரவு 11 மணிக்கு கிண்டியில் உள்ள தனது நிறுவனத்தில் பணிகளை முடித்து விட்டு வீரப்பன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குமரன் நகர் பகுதியில் உள்ள சுசிலா தெரு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் வழி மறித்துள்ளனர்.

கடனை திருப்பி செலுத்தாதது குறித்தும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது பற்றியும் வீரப்பனை அவர்கள் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கிடையேயான தகராறு முற்றவே, மர்ம நபர்கள் இரும்புக் கம்பியைக் கொண்டு வீரப்பனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.

இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடி வருகின்றனர்.

கொலை சம்பவம் குறித்து வீரப்பனின் குடும்பத்தார் தெரிவித்த தகவல்:-

கடனாக பெற்ற ரூ.5 லட்சத்துக்கு இதுவரை ரூ.50 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்து விட்டோம். இதற்கான ரசீதுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இதைத் தவிர எங்களுடைய சொத்துப் பத்திரத்தை மாரிமுத்து வாங்கிக் கொண்ட பிறகே எங்களுக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தொடர்ந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். வீரப்பன் கொலை செய்யப்பட்டதற்கு மாரிமுத்துவும், அவரது கந்துவட்டி கும்பலுமே காரணம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.