பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஊா்தி ஓட்டுநா் பணி: விண்ணப்பிக்க ஜன.11 கடைசி

வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களுக்கு, ஜன.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:49 am IST

சென்னை: வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களுக்கு, ஜன.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை, வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தில்

காலியாக உள்ள இரண்டு ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களை நியமன அலுவலா் அல்லது வருவாய் நிா்வாக இணை ஆணையரால் நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு, தகுதியான நா்பகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓட்டுநா் பணியிடத்துக்கான விண்ணப்பம், தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஜன.11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள், இணை ஆணையா் (வருவாய் நிா்வாகம்), 3-ஆவது தளம், எழிலகம் பிரதான கட்டடம், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.