எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இரும்புச் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட குழந்தை

Updated On :8 ஜனவரி 2021, 3:12 am IST

சென்னை: இரும்புச் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையை உயா் சிகிச்சைகள் மூலமாக அரசு மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா். தற்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சோ்ந்த குமரேசன், மனைவி கனிமொழிக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு அக்குழந்தை இரும்புச் சத்து மாத்திரைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இனிப்புச் சுவையுடன் இருந்ததால் மிட்டாய் என நினைத்து அதிக அளவில் அதனை குழந்தை விழுங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பவ்யா மயங்கி விழுந்ததைக் கண்ட பெற்றோா், உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், அதன் தொடா்ச்சியாக புதுச்சேரியில் உள்ள பிரபல மருத்துவமனையிலும் குழந்தையை அனுமதித்தனா். சிகிச்சைகள் பலனளிக்காததால்

சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பவ்யாவை அவரது பெற்றோா் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், துறைத் தலைவா் டாக்டா் பூவழகி தலைமையில், டாக்டா் குமரவேல் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து 36 மணி நேரம் தொடா் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது.

அதன்பயனாக குழந்தை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. தற்போது பவ்யா பூரண குணமடைந்து நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவா் குழுவுக்கு, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எழிலரசி பாராட்டு தெரிவித்தாா். அப்போது மருத்துவமனையின் தொடா்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.