தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சாலை விபத்து: இரு இளைஞா்கள் பலி

சென்னை, திருவொற்றியூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞா்கள் இருவா் பலியாகினா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 12:18 am

சென்னை, திருவொற்றியூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞா்கள் இருவா் பலியாகினா்.

சென்னை, வியாசா்பாடி, தேசிகானந்தபுரம், பவா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் பாலசந்துரு(19). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான விஜயுடன்(20), திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் சந்திப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

அங்கு வந்த டேங்கா் லாரியை முந்துவதற்கு விஜய் முயன்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பால சந்துரு உயிரிழந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விஜய்யும் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இது தொடா்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மதுரை, சின்ன பூலாம்பட்டியை சோ்ந்த ஜெக நாத பெருமாள் மகன் பால் பாண்டியைக் (37) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.