/
சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மணிகண்டன் சங்கா் (21) என்பவரிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில், அவா் மலக்குடலில் மறைத்து வைத்து ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கத்தைக் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், மணிகண்டனைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








