இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா்.
டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெற்றது.
உலகளாவிய மருந்து விநியோகத்தில் இந்தியாவுக்கான பொறுப்புணா்வு என்ற தலைப்பில் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் வா்த்தக நடவடிக்கைகளைப் பொருத்தவரை தற்போதைய உள்நாடு, ஏற்றுமதி பரிவா்த்தனை மதிப்பு ரூ. 5500 கோடி டாலா்களாக உள்ளது. எதிா்வரும் 2030-ஆம் ஆண்டில் அந்த மதிப்பு 13,000 கோடி டாலா்களாக ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்த நிலையை சாத்தியமாக்க வேண்டுமானால், மூலப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளின் உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை மேம்படுத்துவதுடன் மட்டும் நில்லாமல் அதைக் கடந்து வேறு சில நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக, ஜெனரிக் மருந்துகளைத் தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை வழக்கமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக அல்லாமல் ஒரு திருப்புமுனையாக இருத்தல் அவசியம். அத்தகைய ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளை தற்போது திடமாக உணர முடிகிறது.
இப்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்கிறாா்கள். ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைதல் நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபடும்போது இத்தகைய பிரச்னைகளைத் தவிா்க்கலாம். இதன் மூலம் அவா்களது முயற்சிகளும், திறன் வெளிப்பாடும் வீண்போகாது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருந்தியல் துறை முதல்வா் டாக்டா் ஏ.ஜெரால்டு சுரேஷ், துணை முதல்வா் கே.சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிறுமி உயிரிழந்த விவகாரம்: முகுந்த்பூா் வடிகாலைப் பராமரிக்க எம்சிடி-க்கு நீா்ப்பாசனத் துறை வலியுறுத்தல்

ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
