"திருவாசகம்' என்ற பெயரில் உருவாகிவந்த படத்துக்கு தற்போது, "ஈர வெயில்' என பெயர் வைத்துள்ளனர்.
"ஆல்பம்' ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.கே.எம். ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டே நைட் பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் இப்படத்தை, புதுமுகம் ஏ.கே.மைக்கேல் இயக்குகிறார்.
இயக்குநரிடம் பேசுகையில், ""கதையில் காதல்தான் பிரதானம். சந்தர்ப்ப சூழலால் கைவிடப்படும் ஒரு காதல் எந்த மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதே கதை'' என்றார்.