காலையில் 3 மணிக்கே செட்டுக்கு வந்த அஜீத்: உருகும் ‘அப்புக்குட்டி’ சிவபாலன்!

சென்றவாரம், அப்புக்குட்டி என்கிற சிவபாலனை அஜீத் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தது
காலையில் 3 மணிக்கே செட்டுக்கு வந்த அஜீத்: உருகும் ‘அப்புக்குட்டி’ சிவபாலன்!
Updated on
1 min read

சென்றவாரம், அப்புக்குட்டி என்கிற சிவபாலனை அஜீத் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தது சமூகவலைத்தளம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டோஷூட் எப்படி நிகழ்ந்தது என சிவபாலன் பேட்டியளித்துள்ளார்.

இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியபோது:

ஒருநாள் மதியம்... ஒரு புது நம்பர்ல இருந்து கால் வருது. நான் சொல்ற இடத்துக்கு காலையில 6 மணிக்கு வந்திடுங்கன்னு சொன்னார் அஜீத் சார். எதுக்கு என்னன்னு கேட்காம போய் நின்னேன்.

அஜீத் சார் என்னை வச்சு போட்டோ ஷூட் பண்ணப் போறார்னு சொன்னாங்க. இதுக்காக காலையில 3 மணிக்கே அவர் செட்டுக்கு வந்து வேலை பார்த்துட்டு இருக்கார்னு சொன்னாங்க. வெலவெலத்துப் போய்ட்டேன்.

விதவிதமான ஸ்டைலான டிரெஸ்களை அஜீத்தே செலக்ட் பண்ணிக் கொடுத்தார். எப்படி ஸ்டைலா லுக் விடணும்னு அஜீத் சாரே செய்து காட்டினார். காலை 8 மணிக்கு ஆரம்பிச்ச போட்டோ ஷூட் இரவு 1 மணி வரை நடந்துச்சு.

என்னோட பல்லுல  காரை படிஞ்சு இருந்தது. அதை அவரோட பர்சனல் டாக்டரை வெச்சு கிளீன் பண்ணவெச்சார். ஸ்பாட்டிலேயே ஃபேஷியல் பண்ணி முகத்தை பளிச்சுன்னு ஆக்கினார். என்னோட வாழ்நாள்ல இந்த போட்டோ ஷூட்டை மறக்கவே முடியாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com