

மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளார்கள். இதில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, ‘மணி ரத்னம் இன்னும் படத்தின் கதாநாயகியை முடிவு செய்யவில்லை. செய்திகளில் வெளிவந்ததுபோல ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், துல்கர் மலையாளப் படம் ஒன்றில் நடிக்கச் சென்றுள்ளதால் அவருக்காகக் காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகும்’ என்று தகவல் தெரிவித்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.