

நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், பாகுபலி ஹீரோ பிரபாஸ். ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுவரும் பாகுபலி படத்தை பிரதமர் பார்க்கவேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை ராஜமெளலி இயக்கியுள்ளார்.
பிரதமரைச் சந்தித்தது பற்றி பிரபாஸ் கூறும்போது, என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள் இது. நான் பிரதமரின் பெரிய ரசிகன். அதனால் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. நேரம் இருந்தால் நீங்கள் படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நான் கொஞ்சம் பிஸியாக உள்ளேன். வாய்ப்பிருக்கும்போது நிச்சயம் படத்தைப் பார்க்கிறேன் என்று உறுதியளித்தார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.