பிரபல இசையமைப்பாளர் மரகதமணி அடுத்த வருடம் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி, தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறும்போது,
என்னுடைய முதல் பாடலை டிசம்பர் 9, 1989 அன்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்தேன். அப்போதே ஓய்வு தேதி என டிசம்பர் 8, 2016 நாளை குறித்துவைத்துவிட்டேன். அன்றைய தினத்தை என்னுடைய நெருங்கிய நண்பர்கள், இசைக்கலைஞர்களுடன் கொண்டாட உள்ளேன். பல இயக்குநர்கள் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் என்னைப் புரிந்துகொண்ட இயக்குநர்களிடம் மட்டுமே பணிபுரிந்தேன். அதனால் தான் வருடா வருடம் நான் பண்ணுகிற படங்களின் எண்ணிக்கை குறைந்து போயின. அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் ஒரே நாளில் ஓய்வு பெறவில்லை. படிப்படியாகவே ஓய்வு பெறுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


