
செய்திகள்
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்களித்த மகளிர் - பிடிஐ
மேற்கு மேதினிபூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும், மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மிகக் குறைந்த அளவாக, கூச் பெஹார் தெற்குத் தொகுதியில் 38.67 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மால்டா மாவட்டத்தின் சஞ்சல் தொகுதியில் 38.22 சதவீதமும், ஹரிச்சந்திரபூர் தொகுதியில் 37.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
11 மணி நிலவரம்: 41.11% வாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 41.11சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: கார்கே
மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அனைத்துக் குடிமக்களும் தவறாமல் வெளியே வந்து, பெருமளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை ஊக்கமிழக்கச் செய்ய முயலும் சக்திகளைக் கண்டு நீங்கள் அஞ்சிவிட வேண்டாம். உங்கள் வாக்குதான் உங்கள் குரல்; அந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
பாரமதி, ரஹூரியில் இடைத்தேர்தல் ஏன்?
மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இதனால் பாரமதியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது.
ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பாரமதியில் வாக்களித்தார் சுப்ரியா சூலே
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே பாரமதி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.

சுப்ரியா சூலே
பாரமதி, ரஹூரி இடைத்தேர்தல் 9 மணி நிலவரம்
மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்களித்தார் சுவேந்து அதிகாரி
நந்திகிராம் தொகுதி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு செலுத்தினார்.

சுவேந்து அதிகாரி
ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.
18.76% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளது.
வட வங்காளம் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 152 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கம்: 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு!

தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

