
இந்திய சினிமா வரலாற்றிலே முதல்முறையாக ஒரு படத்தின் ஆல்பம் 500 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது புஷ்பா பட ஆல்பம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வருவாய் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா புஷ்பா படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்கள் முக்கிய காரணியாக அமைந்தது. மேலும் சமந்தாவின் நடனமும் முக்கியமான வியாபார காரணியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என புஷ்பா பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிரும் அளவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
இந்திய சினிமா வரலாற்றிலே முதல்முறையாக ஒரு படத்தின் ஆல்பம் 500 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The Biggest Ever Feat In Indian Cinema
â Mythri Movie Makers (@MythriOfficial) July 15, 2022
Icon Star @alluarjun's #PushpaTheRise is the First Album to hit 5 BILLION VIEWS
A Rockstar @ThisIsDSP Musical#5BViewsForPushpaAlbum @iamRashmika @aryasukku @TSeries @adityamusic pic.twitter.com/mR3G9PwYtS
Related Article
மீண்டும் ஆத்ரேயாவாக சூர்யா - உருவாகிறது 24 படத்தின் இரண்டாம் பாகம்
ஹிப்ஹாப் தமிழா இசையில் அகில் - மம்மூட்டி இணைந்து மிரட்டும் 'ஏஜென்ட்' டீசர்
லோகேஷ் கனகராஜ் - வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்ட விக்ரம் பிரபுவின் ரெய்டு முதல் பார்வை போஸ்டர்
ஹீரோவாக நடிக்கும் விஜய் டிவி ரக்ஷன் - முழு விவரம் இதோ
‘நிரபராதியென நிரூபிக்கும்வரை படங்களை இயக்கப்போவதில்லை’-விருதுபெற்ற மலையாள இயக்குநர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






