விஜய் டிவி புகழ் ரக்ஷன்நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கும் ரக்ஷன், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாம் நாயகனாக அறிமுகமாகி கலக்கினார். அந்தப் படத்தில் நடிகர் ரக்ஷனின் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து தனி நாயகனாக பெரிய வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடையே உருவானது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருக்கிறார் ரக்ஷன்.
இந்த நிலையில் ரக்சன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இரா கோ யோகேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.

இந்தப் படத்தில் கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடிக்கின்றனர். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

சச்சின் வாரியர் இசையமைக்க, தாமரை இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார். கோபி துரைசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!






