‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: இயக்குநர் த.செ.ஞானவேல்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: இயக்குநர் த.செ.ஞானவேல்

“இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.”
Published on

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல், தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஞானவேல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஞானவேல் வெளியிட்ட பதிவு:

“வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை.

வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.

அதன் அடிப்படையில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com