நாக சைதன்யா, சோபிதா காதல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனைத்தொடர்ந்து, இந்த பிரபலங்கள் இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இறங்கினர்.
இதற்கிடையே, நடிகர் நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.
சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின.
இந்த நிலையில், நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுக்குள் சுற்றுலா செல்வது போன்ற புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அதேபோல், சோபிதாவும் காட்டுக்குள் ஜீப்பில் செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த இரு புகைப்படங்களில் இருக்கும் இடங்களும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளதாகவும் இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.