தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தனுஷுக்கு எனது மகள் ஜோடியா? கவுதமி புதிய விளக்கம்!

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :20 நவம்பர் 2016, 1:04 pm IST

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடிகர் கமலுடன் வாழ்ந்து வந்த  நடிகை கவுதமி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்தார். தனது மகள் சுப்புலக்ஷ்மியின் எதிர்காலம் கருதிதான் இந்த முடிவை எடுத்ததாக அப்போது அவர் அறிவித்தார்.

இந்நிலையில் கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, நடிகர் தனுஷ் நடிக்க உள்ள 'வேலையில்லா பட்டதாரி-2' வில்  நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் நேற்று ஒரு தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவுதமி, 'என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கமளிப்பதில்லை. ஆனால் இது என் மகளின் எதிர்காலம் பற்றியது என்பதால் விளக்கம் கொடுக்கிறேன். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிப்பு பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.