அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காலத்தை உயிராய் கருதி வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்! எஸ்.பி.முத்துராமன்

கலைஞர்கள் உள்பட அனைவரும் காலத்தை உயிராய் கருதி வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

News image
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தி மெட்ராஸ் 'ஃ'பிலிம் சொசைட்டி சார்பில் நடைபெற்ற எம்.எஃப்.எஸ். நல்லி திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

கலைஞர்கள் உள்பட அனைவரும் காலத்தை உயிராய் கருதி வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

தி மெட்ராஸ் "ஃ"பிலிம் சொசைட்டி சார்பில், திரைத் துறை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா (நல்லி "ஃ"பிலிம் விருது }2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை சச்சு, தி மெட்ராஸ் "ஃ"பிலிம் சொசைட்டி தலைவர் நல்லி குப்புசாமி, ஜெர்மன் கலாசார மைய இயக்குநர் ஹெல்மட் ஷிப்பெர்ட், ஜப்பான் துணைத் தூதரக ஆலோசகர் மெகுமி ஷிமாதா, ஜாம்பியா துணைத் தூதரக அதிகாரி சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை சச்சு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும், சிறந்த இயக்குநர் விருது சீனு ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படம் } தர்மதுரை (ஆர்.கே. சுரேஷ்) சிறந்த நடிகர் } பிரஜன் ( பழைய வண்ணாரப்பேட்டை), சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை), சிறந்த பாடகர், பாடலாசிரியருக்கான விருது - அருள்ராஜ் (நெருப்புடா}கபாலி), சிறந்த பாடகி - மநாசி, சிறந்த புதுமுகம் } குரு சோமசுந்தரம் (ஜோக்கர்) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில், எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, "முதலாம் ஆண்டுக்கான "எம்எஃப்எஸ் நல்லி விருதை' வாழ்நாள் சாதனைக்காக பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கலைத் துறையின் மூலம் மனிதநேயத்தை ஏற்படுத்த முடியும். காலம் பொன் போன்றது என்பதைவிட உயிர் போன்றது. எனவே, கலைஞர்கள் உள்பட அனைவரும் காலத்தை உயிரென கருதி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சரித்திரம் படைக்கவேண்டும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.