இயக்குநர் சுசீந்திரன் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எனப் பெயர் மாற்றம்!
எனவே நெஞ்சில் துணிவிருந்தால் என்று தலைப்பை மாற்றியுள்ளோம். கதைக்கும் இதுதான் சரியாக உள்ளது...


சுந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படம் - அறம் செய்து பழகு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு, நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுசீந்திரன் விளக்கம் அளித்ததாவது: மதுரையை சேர்ந்த ஒரு மருத்துவமனை தன்னுடைய சமூகசேவை தொடர்புடைய பணிகளுக்கு அறம் செய்து பழகு என்கிற தலைப்பைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். ஆனால் அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். எனவே நெஞ்சில் துணிவிருந்தால் என்று தலைப்பை மாற்றியுள்ளோம். கதைக்கும் இதுதான் சரியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுதவிர புதுமுகங்களைக் கொண்டு நகரம் சார்ந்த ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...