பெரிய, சிறிய பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்வது என்பது சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் அறிக்கை:
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ஜூலை 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றபோதும், பல வகையில் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. ஹோட்டல்களுக்கு 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
திரைப்படங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, தங்கல் போன்ற பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களைப் பெரிதும் பாதிக்கும். திருட்டு விசிடி, ஆன்லைனில் திரைப்படம் வெளியீடு போன்ற காரணங்களால் ஏற்கெனவே திரைப்படத் தொழில் முடங்கி வருகிறது. இந்நிலையில் அதிகபட்ச வரி விதிப்பு என்பது, இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை, அதனை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளும். எனவே, வரி விதிப்பு விவகாரத்தில் தெளிவான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


