இப்படிச் சொன்னது யார் தெரியுமா? இயக்குனர் விஜயின் வெளிவரவிருக்கும் புது திரைப்படமான ‘வனமகன்’ நாயகி சாயேஷா. படத்தைப் பற்றியும் தமிழில் தனது அறிமுகம் குறித்தும் பேசுகையில் நடிகை சாயேஷா இப்படிக் கூறினார். பாலிவுட்டில் இயக்குனர் யாஷ் சோப்ரா போலவே கோலிவுட்டில் இயக்குனர் ஏ.எல்.விஜய், தனது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் உட்பட பிற பெண்களை கெளரவமாக நடத்தியதைக் கண்டதும் தனக்கு இப்படிச் சொல்லத் தோன்றியதாக சாயேஷா தெரிவித்துள்ளார்.
மேலும் பழம்பெரும் பாலிவுட் சூப்பர் ஹீரோவான திலீப் குமாரின் பேத்தியான சாயேஷா... தனக்கு அந்த உறவு முறை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்றும், நானும், என் அம்மாவும் மட்டுமே இப்போது எங்களது உலகத்தில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். அதோடு ஒரு புகழ்பெற்ற பிரபலத்தின் உறவினர் என்பது சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இங்கே கடின உழைப்பிருந்தால் மட்டுமே நீடிக்க முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.