தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம்: துல்கர் வேண்டுகோள்

தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்...
தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம்: துல்கர் வேண்டுகோள்
Updated on
1 min read

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், கடந்த வாரம் பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார். 

துல்கர் நடித்த காம்ரேட் இன் அமெரிக்கா படம் வெளியான அதேநாளில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துல்கரின் மனைவி அமல் சுஃபியாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் துல்கர். குழந்தை பிறந்த சமயத்தில் துல்கரின் தந்தையும் நடிகருமான மம்மூட்டி, தாய் சுல்ஃபாத், நஸ்ரியா நஸிம், விக்ரம் பிரபு ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அமலைக் கவனித்துக்கொண்டார்கள்.

துல்கர் - சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் அமல் சுஃபியா ஆகிய இருவருக்கும் 2011 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இப்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் துல்கர் சல்மானின் குழந்தை என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இதுகுறித்து துல்கர் கூறியதாவது:

குழந்தையின் தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கவேண்டும் என விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை அனைத்தும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com