12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவை அழிக்கிறார்: கமல் மீது மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிகளுக்கு கூட்டம் வருவதில்லை... 

Published On :

கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - உறுதி கொள். கதாநாயகியாக மேகனா நடித்துள்ளார். இயக்கம் - அய்யனார்.  

இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:  

திரையரங்கில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்குச் சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. திரையுலகினர்தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி படி அளக்கிறது. அவங்க கஷ்டம் தீரட்டும், பரவாயில்லை. ஆனால் கமல் போன்ற ஒரு சாதனைக் கலைஞர் இதுமாதிரியான நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் சினிமாவை அழிக்கக் காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிகளுக்கு கூட்டம் வருவதில்லை. அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலைக் காட்சிகளுக்கும் கூட்டம் வருவதில்லை. இதனால் எல்லாக் காட்சிகளும் பாதிப்படைந்துள்ளன.

நாளை கமல் படம் வெளிவரும்போது அஜீத்தோ, விஜய்யோ இதுபோன்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதனால் தன்னுடைய படத்தின் வசூல் பாதித்தால் என்னவாகும் என கமல் யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.