திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் அல்லது வற்புறுத்தும் போக்கு மலையாளத் திரைப்பட உலகில் தற்போது இல்லை என்றும்... அப்படி பட வாய்ப்புகளுக்காக எந்த நடிகையாவது படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று செய்திகள் வந்தால் அத்தகையவர்கள் கெட்ட பெண்களாகவே இருப்பார்கள். மலையாளத் திரையுலகில் தற்போது நடிகைகளின் பாதுகாப்புக்கும், கெளரவத்திற்கும் உத்தரவாதமளிக்கத் தக்க ஆரோக்கியமான சூழலே நிலவி வருகிறது என பிரபல மலையாள நடிகரும், பாராளுமன்ற உறுப்பினரும், மலையாளத் திரைப்பட சம்மேளனமான ‘AMMA' அமைப்பின் தலைவருமான ‘இன்னோசென்ட்’ நேற்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
நடிகை பாவனா காரில் கடத்தப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மீண்டதன் பின் மலையாளத் திரைப்பட உலகில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் நடிகைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதையொட்டி பிரபல மலையாலப் பத்திரிகை ஒன்று; பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப் படும் நிலை இப்போதும் மலையாளப் படவுலகில் உண்டா? என்ற கேள்வியை மூத்த நடிகரும், பாராளுமன்ற உறுப்பினரும், 'AMMA' திரையுலகில் கடந்த காலங்களைப் போல அமைப்பின் தலைவருமான 72 வயது இன்னொசென்ட்டிடம் கேட்டிருந்தது. அதற்கு அவரளித்த பதிலில் “இல்லை... இப்போது மலையாளத் திரைப்பட உலகம் சுத்தமாகவே இருக்கிறது. அப்படி ஏதாவது விபரீதங்கள் இங்கே இருப்பதாகத் தெரிந்தால் சமூக ஊடகங்கள் சும்மா விடுமா? உடனடியாக அத்தகைய விசயங்கள் கண்டறியப்பட்டு மக்களிடையே வெளிச்சமிடப் பட்டு விடுகின்றன. ஆனால் சில நேரங்களில் பெண்கள் கெட்டவர்களாக இருந்து அவர்களே இம்மாதிரியான விசயங்களுக்கு ஒப்புக் கொள்ளும் போது அப்படியான அபத்தங்கள் நடக்கலாம். என்று தெரிவித்திருந்தார்.
இன்னொசென்ட்டின் இந்த பதிலைக் கேட்டு, பாவனா சம்பவத்துக்குப் பிறகு, நடிகை மஞ்சு வாரியர் தலைமையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மலையாள நடிகைகள் பாதுகாப்புக் கூட்டணியான WCC (Woman in Cinima Collective) உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. “ அவரது கூற்றை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது... இப்போதும் பட வாய்ப்புகளுக்காக இளம் நடிகைகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தரும் செயல் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எங்களது சக நடிகைகளான பார்வதி மேனன், லஷ்மி ராய் உள்ளிட்டோர் கூட அப்படியான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தான் என்பதை அவர்களே கூறத் தயங்கவில்லை. இப்படி கண் கூடான நேரடி ஆதாரங்கள் இருக்கும் போது... பொது ஊடகங்களில் பொறுப்புணர்வோ, கவனமோ இன்றி இளம் நடிகைகளைப் பற்றி இன்னொசென்ட் போன்ற மூத்த நடிகர்கள் இப்படியான கருத்துக்களைப் பகிரக் கூடாது” என்று WCC அமைப்பு தெரிவித்துள்ளது.
Related Article
'பவர் ஸ்டார் டு போர்ன் ஸ்டார்' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா!
பிக் பாஸ் ஒரு வக்கிர விளையாட்டு... ஆனால் அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்:அனுயா!
ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து!
‘பிக் பாஸ்’ ஜூலி நடிகையா? யூடியூப் வீடியோக்களை முன்வைத்து எழுந்துள்ள புதிய சர்ச்சை! (வீடியோ)
நிஜமாகவே அமீர்கானின் டங்கல் 2000 கோடி வசூலை எட்டி விட்டதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



