நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரஜினிக்கு எதிராகப் பேசினேனா? கெளதம் கார்த்திக் விளக்கம்

ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். நான் அவரை சூப்பர் ஸ்டாராக மட்டுமே பார்ப்பேன்...

News image
Updated On :26 ஜூன் 2017, 3:14 pm IST

ரஜினி அரசியலுக்கு நுழையக்கூடாது. அவர் நடிகராக மட்டுமே இருக்கவேண்டும் என்று நடிகர் கெளதம் கார்த்திக் கூறியதாக சமீபத்தில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கெளதம் கார்த்திக் எதிர்ப்பதாக பலரும் கெளதம் கார்த்திக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கெளதம் கார்த்திக் ட்விட்டரில் கூறியதாவது:

இவன் தந்திரன் பட நிகழ்ச்சிகாகத் திருச்சியில் இருந்தேன். ரஜினி சார் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்கிற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் சொன்னேன், ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். நான் அவரை சூப்பர் ஸ்டாராக மட்டுமே பார்ப்பேன் என்றேன். இதுமட்டும்தான் நான் சொன்னது. ஆனால் நான் சொன்னது வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. தவறாக எழுதிவிட்டார்கள். என்னை அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கவேண்டாம். அரசியலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் படத்தில் நடிக்கவே இங்கு வந்துள்ளேன். படம் பார்க்கவே விருப்பப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்க்க விருப்பப்படுகிறேன். அவ்வளவுதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.


கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இவன் தந்திரன் படம் ஜூன் 30 அன்று வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.