பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவ் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் வாழ்ந்த நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்திருந்தார் ஆரவ்.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு ஒரு கெட்டுகெதராக அவர்களுக்கு அமைந்தது. ஆரவ், கணேஷ், ரைஸா, ஹரீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் சினிமா வாய்ப்புக்கள் தேடி வந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார்கள்.

தங்களுடைய பிஸி நாட்களிலும் ஆரவிற்கு வாழ்த்துச் சொல்ல இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பிக் பாஸ் குடும்பத்தினர். ரைஸா மற்றும் கணேஷ் இருவரும் எடுத்த புகைப்படஙக்ளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஓவியாவும் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார் என்பது கணேஷ் வெளியிட்ட ஃபோட்டாவின் மூலம் தெரிய வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

கணேஷ் ஓவியாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் பார்ட்டியில் கலந்து கொண்டு இறுதியில் அப்புகைப்படம் எடுக்கப்பட்டதால், அதில் ஓவியா களைப்புடன் காணப்பட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளவும், மீண்டும் பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவும் ஓவியா தயங்கவில்லை. ஆரவ் ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ஈகோ காட்டவில்லை. வெளிப்படையான பேசிப் பழகும் இயல்புடைய ஓவியா தன்னை மதித்து பார்ட்டிக்கு அழைப்பு விடுத்திருந்த ஆரவிற்கு பதில் மரியாதை செய்யும் விதமாக பார்ட்டிக்குச் சென்றார்.

வழக்கம் போல அதே புன்னகையுடன் நிழழ்ச்சியில் பங்கேற்ற் ஓவியா, ஆரவ்வை வாழ்த்திவிட்டு, பார்ட்டியை கலகலப்பாக்கினார். சிறிது நேரம் பிக் பாஸ் நண்பர்களுடன் அரட்டை மற்றும் ஃபோட்டோ எடுத்துவிட்டுக் கிளம்பினார். அதுதான் ஓவியாவின் குணம் என்று வியந்து பாராட்டினார்கள் அவரது ரசிகர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா, வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வு!

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!

3,400 மின்சார வாகனங்களுக்கான ஆர்டரை வென்ற டாடா மோட்டார்ஸ்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




