சமந்தா நாகா சைதன்யா திருமணத்தை டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் இவர்களின் திருமணத்து மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்து முறைப்படி அக்டோபர் 6 மற்றும் கிறிஸ்துவ முறைப்படி அக்டோபர் 7-ம் தேதிகளில் கோவாவில் பிரமாண்டமாக நடைபெறும் இத்திருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் 175 பேரை மட்டும் அழைத்திருக்கிறார்கள்.
இந்த நட்சத்திர ஜோடி 5-ம் தேதி கோவாவுக்குப் புறப்பட்டு 8-ம் தேதி வரை அங்கே இருப்பார்கள். டோலிவுட்டிலிருந்தும் சில முக்கிய நண்பர்களை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரத்யேகமாக அழைத்திருக்க, சமந்தா கோலிவுட்டிலிருந்து யாரை எல்லாம் அழைத்துள்ளார் என்பது செப்டம்பர் 6-ம் தேதி தான் தெரியும்.