தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிரெய்லர்களை ரசிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க விவேக் கோரிக்கை!

காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என...

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 7:02 am

எழில்

காவிரி, தூத்துக்குடி பிரச்னைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி - இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை! கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.