படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்துக் கொண்டாடுகிறார்கள். அதைப் படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவைச் சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன்தான். எங்களை விட சிறப்பாக ஆடு, மாடுகளை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி, கூட்டிச் செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது. அப்படி உங்களுக்கு என்ன அக்கறை எங்களுக்கு இல்லாதது ? எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் யாரும் கவலைப்ப வேண்டாம். ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றால் கூட நாங்கள் மாடு சாப்பிடாமல் இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம். பிரியாணியும் மட்டன், சிக்கனும் சாப்பிட்டு எங்களுக்கு விதிமுறைகள் வகுக்கிறீர்களா என்று உணர்ச்சிவயமாகப் பேசினார்.