காற்றின் மொழி: படக்குழுவினருக்குப் பரிசளித்த ஜோதிகா!

இதையடுத்து படக்குழுவினருக்குப் பரிசுகளை அளித்துள்ளார் ஜோதிகா...
காற்றின் மொழி: படக்குழுவினருக்குப் பரிசளித்த ஜோதிகா!
Published on
Updated on
1 min read

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். 

ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா போன்றோரும் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.

இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை நடித்துக்கொடுத்துவிட்டார் ஜோதிகா. ஜூன் 4 அன்று படப்பிடிப்பு தொடங்கியது. ஜூலை 25 அன்றுடன் ஜோதிகா பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினருக்குப் பரிசுகளை அளித்துள்ளார் ஜோதிகா. பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, சட்டையை அனைத்து படக்குழுவினருக்கும் அளித்துள்ளார். மேலும் உதவி இயக்குநர்களுக்குச் சிறப்புப் பரிசுகளையும் அளித்துள்ளார். இறுதியாக கேக் வெட்டப்பட்டு ஜோதிகாவின் ஒத்துழைப்புக்கு நன்றி செலுத்தப்பட்டது. தான் பணியாற்றிய படக்குழுக்களில் இதுவே சிறந்தது என்று அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார் ஜோதிகா. இன்னும் சில நாள்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும். இதையடுத்து அக்டோபர் மாதம் காற்றின் மொழி படம் வெளிவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com