

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இருவருக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை நிலவி வந்தது எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. தற்போது தாங்கள் பிரிவதாக இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
அர்ஜுன் ராம்பல், மெஹர் ஜெசியாவுக்கு மஹிகா, மயிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் இத்தம்பதியினர் பிரிந்துவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. உறவால் பிரிந்துவிட்டாலும் எங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறையாக இருப்போம். அவர்களுக்கான விஷயங்களில் சேர்ந்து முடிவு எடுப்போம், திருமண உறவு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர எங்களிடையே உள்ள அன்பு அல்ல’ என்று தெரிவித்துள்ளார் மெஹர்.
அர்ஜுன் ராம்பலுக்கும், பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் அவரின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றுவிட்டது என்கிறது பாலிவுட் மீடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.