கடலில் தத்தளித்த பிரியங்கா சோப்ரா!

அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.
கடலில் தத்தளித்த பிரியங்கா சோப்ரா!
Published on
Updated on
1 min read


அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். சமீபத்தில் தனது பிறந்த நாளை புளோரிடா நகரிலுள்ள மியாமி கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. நடுக்கடலில் படகில் சென்றபடி கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா சோப்ரா, திடீரென்று கால் இடறி கடலில் தலைகுப்புற விழுந்தார். கடலில் தத்தளித்த அவரை மீட்க நிக் ஜோனஸ் முயன்றார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த கடல் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ராவை மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிரியங்கா சோப்ரா கடலில் விழுந்த புகைப்படக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com