டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கும் மலையாளப் படக்குழு!

சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர்...

News image
Updated On :16 டிசம்பர் 2019, 10:38 am

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இந்நிலையில் சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர், தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநர் ஜகாரியா முகமது ஃபேஸ்புக்கில் கூறியதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளார். இப்படத்தில் நடித்த சாவித்ரிக்கு, தேசிய விருதுக்கான நடுவர்களின் சிறப்பு விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.