காற்றின் மொழி படத்துக்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் எஸ். ராஜுடனான படத்தில் நடித்துமுடித்துவிட்டார் ஜோதிகா. இந்நிலையில் அவருடைய புதிய படம் ஒன்று பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், ஜெகன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - விஷால் சந்திரசேகர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.