ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பட அறிவிப்பை வெளியிடலாமா?: ரசிகர்களிடம் கருத்து கேட்கும் விஷ்ணு விஷால்!

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை (ஏப்ரல் 11) வெளியிடலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 7:52 am

DIN

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை (ஏப்ரல் 11) வெளியிடலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய புதிய படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 11 அன்று வெளியிடுவதாக இருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் புதிய பட அறிவிப்பை வெளியிடுவது குறித்து விஷ்ணு விஷாலுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை நாளை வெளியிடலாமா என ட்விட்டரில் ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.