விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தினார்கள்: வித்யா பாலன்

ஒரு பெரிய தமிழ்ப் படத்திலிருந்தும் என்னை நீக்கினார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2020, 7:25 am

DIN

திரையுலகில் நடிக்க வந்த புதிதில் தன்னை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தியதாக வித்யா பாலன் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

மோகன் லாலுடன் என்னுடைய முதல் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது முதல் பகுதிப் படப்பிடிப்பு முடிந்தபோது ஏழெட்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்தப் படம் அதோடு நின்றுபோனது. என்னுடைய முதல் படம் நின்று போனதோடு மட்டுமல்லாமல் இதர வாய்ப்புகளும் என்னை விட்டு நழுவிச் சென்றன. ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தினார்கள்.

எனக்கு இதில் நம்பிக்கையில்லை. வெற்றியோ தோல்வியோ ஒருவரை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. சில நேரங்களில் சில விஷயங்கள் நடக்காது. எல்லாப் படங்களில் இருந்தும் என்னை நீக்கியபோது நான் மனம் உடைந்தேன். ஒரு பெரிய தமிழ்ப் படத்திலிருந்தும் என்னை நீக்கினார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன். பிறகு பிரதீப் சர்கார் எனக்கு அளித்த வாய்ப்புகள் தான் திருப்புமுனையாக அமைந்தன என்றார். 

தமிழ்ப் பெண்ணான வித்யா பாலன், கடந்த வருடம் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளிப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.