/

‘அன்பிற்கினிய அன்னைய்யா’: எஸ்.பி.பிக்காக உருகிய கமல்

‘அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் கமல் உணர்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.

News image
‘அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் கமல் உணர்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.
Updated On :27 ஜனவரி 2024, 5:08 pm

DIN

சென்னை: ‘அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் கமல் உணர்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள்.  தொரகா ரண்டி அன்னைய்யா’ என்று பதிவிட்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி.பியின் பூர்விகம் ஆந்திரா என்பதும், தெலுங்கில் ‘அன்னைய்யா’ என்றால் அண்ணன் என்று பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.