வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: சரண் தகவல்

பாடகா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல்...

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 11:46 am

DIN

பாடகா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவா் உடல்நிலை சீராக உள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தகவல் தெரிவித்ததாவது:

மருத்துவர்களிடம் இன்று பேசினேன். எஸ்.பி.பி., மயக்க நிலையிலிருந்து 90% மீண்டுவிட்டார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம். என்னிடமிருந்து தகவல்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இன்று நல்ல நாள். 

தமிழிலும் தகவல்களை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்தியா முழுக்க தந்தைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். எல்லா மொழிகளிலும் அப்பாவின் உடல்நிலை குறித்து தகவல் சொல்வதற்கு நீண்ட நேரமாகும். எனவே நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு மற்றவர்கள் தகவல்களைத் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.