மெரினா பட நடிகர் தென்னரசு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்தில் நடித்த தென்னரசு, மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தென்னரசுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.