கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். 
அஜித்
அஜித்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். 

இந்தியாவில்  கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கரோனா தடுப்புப் பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நல நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் வேலை இழந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com