

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2017-ல் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார் அட்லி. இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாகத் தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாகக் கூறியுள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியிடப்படுகிறது.
சமீபத்தில், கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் அட்லி. கரோனா நிவாரணமாக இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 5 லட்சமும் பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு ரூ. 5 லட்சமும் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.