
பிப்ரவரி 14 முதல் மலையாள பிக் பாஸ் தொடங்கடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார். நடிகர் ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.
இந்நிலையில் மலையாள பிக் பாஸ் 3-ம் பருவத்தின் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 14 முதல் தொடங்கவுள்ளது. இந்தமுறையும் மோகன் லால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்காக சென்னை ஏவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.