நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணமா? நடிகை கங்கனா கடும் விமரிசனம்

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :4 அக்டோபர் 2021, 7:32 am

DIN

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். 

நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த சனிக்கிழமை விவாகரத்து செய்யவிருப்பதாகவும், விவாகரத்துக்குப் பிறகு நண்பர்களாக தொடருவோம் என்றும் அறிவித்தனர். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தென்னிந்திய நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் விவாகரத்து வல்லுனர். அவர் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், எப்பொழுது விவாகரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல் தான் உள்ளது. நான் சொல்வது பழமைவாதமாக தெரியலாம். ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும், பெண்ணையும் அவர்களின் இயல்புடன் படைத்துள்ளார். இயற்கையிலேயே ஆண் வேட்டையாடுபவராகவும், பெண் வளர்ப்பவராகவும் இருக்கிறார். 

பெண்களை ஆடைபோல் எளிதில் மாற்றி பின் அவர்களை உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். 100 பெண்களில் ஒருவர் தவறாக இருக்கலாம். ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஊக்கம் பெறும் இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து பெண்களைப் பற்றி தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன் எப்பொழுதைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் ஆமிர் கானுடன் இணைந்து நாக சைதன்யா தற்போது லால் சிங் சதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவுக்கு நடிகை கங்கனா, ஆமிர் கானை குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஹிந்திப் பட உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.