எனக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் கடைசி பாடலாக அண்ணாத்த இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்த பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்காக இதற்கு முன்பு அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவை.
இந்நிலையில் இன்று வெளியான அண்ணாத்த பாடல் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்'' என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்
பவள விழா, பல்லாங்குழி பாப்பாக்களை தூக்கி எறியுங்கள்! விஜய்

ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!

சேயோன் படப்பிடிப்பு எப்போது?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


