
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று(அக்.25) தொடங்கியது.
‘டெடி’ திரைப்பட இயக்குநர் சௌந்தராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று அப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
முன்னதாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ அரண்மனை 3’ திரைப்படம் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இப்படத்தில் ஆர்யாவுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.