''சுவாரசியமா ஏதாச்சும் பண்ணுங்க'' - பிரபல போட்டியாளரைக் கண்டித்த பிக்பாஸ்

பிக்பாஸ் ப்ரமோவில் நாணயத்தை வைத்து சுவாரசியமாக ஏதாவது செய்யுங்கள் என இசைவாணியை பிக்பாஸ் கேட்டுக்கொண்டது. 
''சுவாரசியமா ஏதாச்சும் பண்ணுங்க'' - பிரபல போட்டியாளரைக் கண்டித்த பிக்பாஸ்
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் ப்ரமோவில் நாணயத்தை வைத்து சுவாரசியமாக ஏதாவது செய்யுங்கள் என இசைவாணியை பிக்பாஸ் கேட்டுக்கொண்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு வகையில் பிக்பாஸ் சுவாரசியமாக நகர்வதற்கு காரணமாக இருந்தார். 

இதனால் அபிஷேக் ராஜா அவ்வளவு எளிதில் வெளியேற மாட்டார் என்பதே அனைவரின் எண்ணம்மாக இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸை விட்டு அபிஷேக் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 24வது நாள். இன்றைய நாளின் இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. 

அதில், இசைவாணியை கன்ஃபசன் அறைக்கு அழைக்கும் பிக்பாஸ், நெருப்பு ஆற்றலை குறிக்கும் நாணயம் யாரிடம் இருக்கிறது என்று கேட்கிறார். அது தன்னிடம் இருப்பதாக இசைவானி பதிலளிக்க, உங்களுக்கு இருக்கும் சக்திகளை முறையாகவும், சுவாரசியமாகவும் பயன்படுத்தவில்லையே என கடுமையாக சாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com