நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் பிரபல தமிழ் கதாநாயகன் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்

நடிகர் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் பிரபல நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 11:30 am IST

நடிகர் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் பிரபல நடிகரும், இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'அன்பு', 'காதல் கிசு கிசு', 'மஞ்சள் வெயில்' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த பாலா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இயக்குநர் சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பாலா தனது முகநூல் பக்கத்தில், ''நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமைக்குரிய தருணம். தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். 

Story image

பாலா தமிழ் மட்டுமல்லாமல், மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருந்த 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், மலையளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். கடைசியாக பாலா தமிழில் கார்த்தி, ஜோதிகாவுடன் இணைந்து 'தம்பி' படத்தில் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.