நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டீக்கடை நடத்தும் நயன்தாரா

டீக்கடைகளுக்கும் மலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் டீக்கடை நடத்தி வருகிறார்கள்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 7:02 pm IST


டீக்கடைகளுக்கும் மலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் "சாய்வாலே' என்ற டீ மற்றும் சிற்றுண்டி விற்கும் குழுமத்தில் நடிகை நயன்தாராவும், அவர் காதலர் விக்னேஷ் சிவனும் பெரிய முதலீடு செய்து இருக்கிறார்கள். ரவுடி பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சொந்த படம், பட விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் இந்த இருவரும், தற்போது புதிய தொழிலில் கால் பதித்து இருக்கிறார்கள்.

சென்னை, பெங்களூரில் நவீன டீக்கடையாக இருக்கும் சாய்வாலேவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் முதலீடு செய்து இருப்பதை, இதன் நிறுவனர் விதுர் மகேஸ்வரி உறுதிப்படுத்தியுள்ளார். வணிக வளாகங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் இருக்கும் சாய்வாலேவில் இணைய தளம் மூலமாகவும் டீ மற்றும் சிற்றுண்டிகளை வாங்கலாம் என்பது கூடுதல் தகவல்.

இன்னொரு மலையாள நடிகையான ராதா, மும்பை மற்றும் கேரளத்தில் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார். இது போல் நவ்யா நாயர், கோபிகா போன்ற மலையாள நடிகைகளும் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போது நயன்தாரா இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.